ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின்கீழ் சுயவேலைவாய்ப்பு பயிற்சி பெற்ற இளைஞர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.26.60 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஊரக தொழில்களை மேம்படுத்தவும், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்புகள், புலம்பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய நபர்களுக்கு ரூ.10.15 கோடி மதிப்பில்சிறப்பு நிதி உதவிதொகுப்பு செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.சுயவேலைவாய்ப்பு பயிற்சி பெற்ற 19 இளைஞர்களுக்கு ரூ. 19 லட்சம் தொழில் கடன் உதவியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
மேலும் இரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தலா ரூ.3 லட்சம்மூலதன மானியநிதி மற்றும் புலம்பெயர்ந்து ஊர்திரும்பிய இளைஞர்களுக்கு ரூ.1.60 லட்சம் என மொத்தம் ரூ.26.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் சதீஷ்குமார், மாவட்ட ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயக்குனர் கலைச்செல்வன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE