சிவகங்கை, : ''பட்டம் பெற்ற அனைத்து இளைஞர்களுக்கும் அரசு வேலை வழங்க முடியாது. இதற்காகவே தனியார் கம்பெனிகள் மூலம் வேலை பெற்றுத் தருகிறோம்,'' என சிவகங்கையில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசினார்.
சிவகங்கையில் தமிழகஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி வரவேற்றார்.வேலைவாய்ப்பு முகாமில் 32 தனியார் கம்பெனிகள் நேர்முக தேர்வு மூலம் பணிநியமன உத்தரவு வழங்கினர். முகாமில் மாவட்ட அளவில் இருந்து ஆயிரக் கணக்கான பெண்கள், இளைஞர்கள் பங்கேற்றனர்.கலெக்டர் பேசியதாவது:2020 கொரோனாவால்வேலைவாய்ப்புகள் முடங்கின. அப்போது இது போன்ற வேலைவாய்ப்பு முகாம் நடத்த முடியாமல் போனது.
தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால், வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறோம். வேலையில்லாஇளைஞர்கள் அதிகம். அனைவருக்கும் அரசு வேலை வழங்க முடியாது. இதற்காகவே தனியார் கம்பெனிகள் மூலம் முகாம் நடத்தி வேலை பெற்றுத்தருகிறோம், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE