திருப்பூர்:திருப்பூர் மாநகர போலீஸ் சார்பில், போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு வளர்க்கும் பொங்கல் விளையாட்டு போட்டி கடந்த இரு நாட்களாக திருப்பூர் நஞ்சப்பா பள்ளி மைதானத்தில் நடந்தது.தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தனி நபர் தடகளம், வாலிபால், கோ-கோ, லக்கி நம்பர், பானை உடைத்தல் உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. இருபாலருக்கும் தனித்தனியாக போட்டி நடந்தது. போலீசார், ஊர்க்காவல் படையினர், அமைச்சு பணியாளர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் உட்பட பலர் பங்கேற்றனர்.கபடி போட்டியில், ஆண்கள் பிரிவில் அருள்புரம் டால்பின் கிளப் முதலிடம், பிச்சம்பாளையம் பீனிக்ஸ் கிளப் இரண்டாமிடம்; பெண்கள் பிரிவில் ஆத்துப்பாளையம் ஏ.வி.பி., கல்லுாரி முதலிடம், திருமுருகன்பூண்டி தாஸ் நினைவு கிளப் இரண்டாமிடம் பிடித்தனர்.வாலிபாலில், ஆண்கள் பிரிவில் கே.செட்டிபாளையம் சவுத் டைகர் முதலிடம், வீரபாண்டி வின்னிங் ஹார்ஸ் இரண்டாமிடம்; பெண்கள் பிரிவில், தாலுகா மற்றும் ஊர்க்காவல் படையினர் இணைந்த அணி முதலிடம், ஆயுதப்படை பெண்கள் அணியினர் இரண்டாமிடம் பிடித்தனர்.கோ-கோவில், பெண்கள் பிரிவில் ஜெய்வாபாய் சேலஞ்சர்ஸ் அணி முதலிடம், ஆயுதப்படை பெண்கள் அணி இரண்டாமிடம் பிடித்தனர்.கயிறு இழுத்தலில், ஆண்கள் பிரிவில் போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஏழாவது அணி பி முதலிடம்; பெண்கள் பிரிவில், மாநகர அமைச்சு பணியாளர்கள் முதலிடம் பிடித்தனர்.இரு நாட்களாக நடந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. கமிஷனர் கார்த்திகேயன் பங்கேற்று பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE