திருப்புவனம் : தினமலர் செய்தி எதிரொலியால் திருப்புவனம் பேரூராட்சி நிர்வாகம் மக்களை எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தி வருகிறது.
சமீப காலமாக பெய்த மழையால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், ஊரணிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.இதில் அச்சமின்றி சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் மீன் பிடிக்க, குளிக்க சென்று விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். திருப்பாச்சேத்தி, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இருநாட்களில் ஐந்து சிறுவர்கள் உயிர் இழந்து உள்ளனர். இதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், நீர் நிலைகளை கண்காணிக்க வேண்டும் என தினமலர்நாளிதழில் செய்தி வெளியானது.
இதனையடுத்து திருப்புவனம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினர் சார்பில் தனித்தனியாக வைகை ஆற்றில் நீர்வரத்து உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், சிறுவர்களை ஆற்றுப்பகுதிக்கு அனுப்ப கூடாது, கால்நடைகளை குளிப்பாட்டுதல் உள்ளிட்ட எந்த வகை பயன்பாட்டிற்கும் வைகை ஆற்றுப்படுகைக்கு செல்ல கூடாது என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE