சிதம்பரம்: சிதம்பரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், சேர்மன் கருணாநிதி, மாவட்ட அவைத் தலைவர் குமார் முன்னிலை வகித்தனர்.பாண்டியன் எம்.எல்.ஏ., பங்கேற்று ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.தாசில்தார் ஆனந்த், தலைமைக் கழக பேச்சாளர் தில்லை கோபி, நகர செயலர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் அசோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE