நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் அரசுமேல் நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தலைமை ஆசிரியை அமுதா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துகிருஷ்ணன், துணைத் தலைவர் நடராஜன், ஒன்றிய கவுன்சிலர் ராஜாராம் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியை சாந்தகுமாரி வரவேற்றார்.ஊராட்சி தலைவர் மங்கலம் வேல்முருகன் 170 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்.நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவர் ராஜாராம், ஊராட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE