புதுச்சத்திரம்: புதுச்சத்திரத்தில் கிராமப்புற காவலர் அறிமுகக் கூட்டம் நடந்தது.இன்ஸ்பெக்டர் கவிதா தலைமை தாங்கினார்.கூட்டத்தில், டி.எஸ்.பி., லாமேக் பேசுகையில், 'ஒவ்வொரு கிராமத்திலும் நடக்கும் குற்றச் செயல்கள், சந்தேக நபர்கள், சட்ட விரோத செயல்கள் குறித்து சிறப்பு அதிகாரியிடம் தெரிவிக்கலாம்.ஒவ்வொறு பகுதிக்கும் தனி காவல் அதிகாரி நியமிக்கப்படுவதால், அந்த கிராமங்கள் குறித்த அனைத்து நடவடிக்கையும் விழிப்புணர்வு காவல் அதிகாரிக்கு தெரியும். இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே நல்லுறவு ஏற்படுவதுடன், குற்றச் செயல்கள் குறையும்' என்றார்.சப் இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சிவகுருநாதன், சுப்பிரமணியன், சிறப்பு உதவி ஆய்வாளர் மில்டன், போலீசார் மணிகண்டன், முத்துக்குமார், வெற்றிவேல், திருஞானம், பாலமுருகன் மற்றும் கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE