பல்லடம்:பல்லடம் அரசு பெண்கள் பள்ளியில், மாணவியர் பயன்படுத்தும் பெஞ்ச் துருப்பிடித்து வீணாகி வருகின்றன.கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. பெற்றோரிடம் கருத்து கேட்பு நடத்தி, பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. கடந்த ஒன்பது மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால், அரசு பள்ளிகள் பராமரிப்பு இன்றி உள்ளன.பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 600க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். பள்ளி வகுப்பறையில் மாணவியர் பயன்படுத்தும் டெஸ்க், பெஞ்ச் ஆகியன திறந்தவெளியில் போடப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இவை மழைநீரில் நனைந்து துருப்பிடித்து வருகின்றன.துருப்பிடித்த பெஞ்ச் முற்றிலும் சேதமடைந்து, வலுவற்றதாகி, பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், 'பெஞ்ச்'களை பாதுகாத்து பத்திரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE