சின்னசேலம்: தெலுங்கானாவில் இருந்து சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு 2,600 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் நேற்று கொண்டு வரப்பட்டன.தெலுங்கானா மாநிலம், மிர்யால்குடா பகுதியிலிருந்து 52 ஆயிரம் மூட்டைகளில், 2600 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் நேற்று காலை சின்னசேலத்திற்கு வந்தடைந்தது. 42 ரயில் பெட்டிகளுக்கு கிருமி நாசினி தெளித்த பின், அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றி தமிழ்நாடு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.முன்னதாக, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு மேலாளர் பிரபு மேற்பார்வையில், இந்திய உணவுக் கழக மேலாளர் ராமலிங்கம், உதவியாளர்கள் பிரகாஷ், செல்லதுரை ஆகியோர் அரிசி மூட்டைகளை ஆய்வு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE