திருக்கோவிலூர்: பள்ளியில் கம்ப்யூட்டரைத் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலூர் அடுத்த பிள்ளையார்பாளையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருந்த கம்ப்யூட்டர் சில தினங்களுக்கு முன் திருடுபோனது.இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரவதனா கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வந்தனர்.அதில் கிடைத்த தக வலின் பேரில், சாங்கியம் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் மகன் அசோக்குமார்,31; என்பவரை கைது செய்தனர். மேலும், அவர் திருடிய வைத்திருந்த கம்ப்யூட்டரை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE