திருப்பூர்;ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில், குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருப்பூர் மாநகராட்சி, 46வது வார்டு பகுதியில் ஸ்டேட் பாங்க் காலனி உள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.
இப்பகுதியிலுள்ள வீடுகளில் குடிநீர் வரும் போது, கழிவு நீர் கலந்து வருகிறது. கடும் துர்நாற்றத்துடன், கறுப்பு நிறத்திலும், நுரையுடனும் வருகிறது. குடிநீர் சப்ளை துவங்கிய, முதல் 15 முதல் 20 நிமிடம் வரை இது போல் கழிவு நீர் கலந்து வருகிறது.அப்பகுதியினர் கூறியதாவது:கழிவுநீர் கலந்து வருவதால், மிகவும் சிரமப்படுகிறோம். முற்றிலும் கொதிக்க வைத்து மட்டுமே குடிநீராகவும், சமையலுக்கும் பயன்படுத்துகிறோம்.
இருப்பினும், நோய் தாக்குதல் ஏற்படும் என பயமாக உள்ளது,' என்றனர்.கடந்த மூன்று மாதமாக இந்த நிலை உள்ளது. ராயபுரம் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, அதில் கழிவு நீர் கலந்து வர வாய்ப்புள்ளது. பல்வேறு இடங்களில் கால்வாய் கட்டவும், குழாய் பதிக்கவும் குழிகள் தோண்டியுள்ளனர். அதில், ஏதாவது ஒரு இடத்தில் கழிவுநீர் குடிநீரில் கலக்கிறது. இதனை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.மாநகராட்சி குடிநீர் வினியோக பிரிவில் கேட்டதற்கு, 'ராயபுரம் பகுதியில் குடிநீருடன் கழிவு நீர் கலப்பது குறித்து பகுதிவாரியாக கண்காணித்து சீரமைக்கப்படும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE