திருப்பூர்:'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கரட்டாங்காட்டில் கான்கிரீட் ரோடு அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்த ரோட்டில் ஏறத்தாழ 350 மீ., தொலைவுக்கு எட்டு மீட்டர் அகலத்தில் கான்கிரீட் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதில் மொத்தம் 2.5 கோடி ரூபாய் மதிப்பில் கான்கிரீட் ரோடு; மழை நீர் வடிகால், குடிநீர் குழாய் மற்றும் மின் சப்ளை கேபிள்கள் அமைக்க தனி 'டக்ட்'; பேவர் பிளாக் பதித்த நடைபாதை, அலங்கார தெரு விளக்கு ஆகியன அமைக்கப்படவுள்ளது.இத்திட்டத்தில், சபாபதிபுரம் முதல் வீதி, வி.கே.ஆர்., கார்டன் ஆகிய பகுதிகளிலும் 'ஸ்மார்ட் ரோடு' பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இது தவிர தேர்வு செய்யப்படும் இடங்களிலும் 'ஸ்மார்ட் ரோடு' அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE