விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில், கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசியதாவது:கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் 26ம் தேதி குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும். பொதுப்பணித்துறை நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தை சரி செய்ய வேண்டும்.நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள், அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதிகளையும், சுகாதாரத்துறை மருத்துவக் குழுவினரை ஏற்படுத்த வேண்டும்.பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து அவரவர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.கூட்டத்தில், எஸ்.பி., ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், திண்டிவனம் சப் கலெக்டர் அனு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE