விழுப்புரம்: தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.மாநில தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீரப்பன் வரவேற்றார். பொது செயலாளர் ரங்கசாமி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில் மாநில மற்றும் மண்டல நிர்வாகிகள் கலந்து கெண்டனர்.கூட்டத்தில், நெடுஞ்சாலை துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். நீண்ட நாட்களாக வெளியிடாமல் உள்ள இளநிலை உதவியாளர் முதுநிலை பட்டியலை வெளியிட வேண்டும். கோட்ட கணக்கர்கள் சொந்த வட்டத்தில் பணியாற்ற அரசு ஆணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE