விழுப்புரம்: வாலிபரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம், கிழக்கு சண்முகபுரம் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சங்கர்,24; இவர், மகாராஜபுரத்தை சேர்ந்த பெண்ணை தொடர்ந்து கேலி செய்து வந்தார்.இதனை அறிந்த மகாராஜபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம்,25; அவரது நண்பர்கள் அனிச்சம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல்,23; முரளி,23; ஆகியோரோடு சேர்ந்து நேற்று, கிழக்க பாண்டி ரோட்டில் நின்றிருந்த சங்கரை தாக்கில் கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின் பேரில் விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து சக்திவேலை கைது செய்து மேலும், இருவரை தேடிவருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE