மதுரை : ''கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் அரசு ஊழியர்களை கைது செய்வதை தவிர்த்து அரசு அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்,'' என மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டில் சிறப்பாக சேவையாற்றிய மருத்துவத்துறை மருந்தாளுனர்களின் நீண்டநாள் கோரிக்கையான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மருந்தாளுனரின் பணி நேரம் குறித்த அரசாணையை செயல்படுத்த வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் உண்ணாவிரதம் இருக்க முயன்றவர்களை கைது செய்வதை தவிர்த்து அரசு அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்.மருந்தாளுனர் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து அரசு செயலாளர் மட்டத்தில் 4 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு அழைத்து பேசி தீர்க்க வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE