புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் காங்கேயன் எழுதிய 'என்றும் வாழும் இளைய நிலா' நுால் வெளியீட்டு விழா நடந்தது.ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சங்கர் வரவேற்றார். படைப்பாளர் இயக்க நிறுவனர் ஆறுசெல்வன் தலைமை தாங்கினார். உள்ளாட்சித்துறை புள்ளி விவர ஆய்வாளர் ஞானசேகரன், கலை இலக்கிய பெருமன்ற தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்க மாநில செயலர் சுந்தரவள்ளி நோக்கவுரை ஆற்றினார். திரைப்பட இயக்குனர் சுந்தர்ராஜன் சிறப்புரையாற்றினார். இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி நடராஜன் நுாலை வெளியிட, புள்ளி விவரத்துறை இயக்குனர் ராமகிருஷ்ணன் பெற்றுகொண்டார்.மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சம்பத், தமிழ்ச் சங்க துணைத் தலைவர் பாலசுப்ரமணியன் வாழ்த்தி பேசினர்.நுாலாசிரியர் காங்கேயன் ஏற்புரையாற்றினார். வாசு தலைமையிலான கானமழை திரையிசைக் குழுவினரின் சிறப்பு இசை நிகழ்ச்சி நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE