புதுச்சேரி: பூட்டிய அறையில் பிணமாக கிடந்த ஆசிரமவாசியின் பிரேதத்தை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.புதுச்சேரி மரைன் வீதியை சேர்ந்தவர் கோபால் கபிலா, 59; ஆசிரமவாசியான இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆசிரம தொழில் பட்டறையில் வேலை செய்த இவர் கடந்த 7 ம் தேதி பணிகளை முடித்து விட்டு இரவில் ஆசிரமத்திற்கு சொந்தமான மழையர் பள்ளி கட்டட அறையில் தங்கினார்.மறுநாள் 8 ம் தேதி காலையில் 10 மணி வரையும் அவரது அறை திறக்காததால் மற்றொரு ஆசிரம வாசியான திவாகர், இது குறித்து பெரியக் கடை போலீசில் புகார் அளித்தார்.உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் வந்து, பூட்டிய அறையை உடைத்து பார்த்த போது, படுக்கையில் கோபால் கபிலா பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரிக்கு அனுப்பினர்.அவர் மாரடைப்பால் இறந்தாரா என பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE