புதுச்சேரி: வாய்க்காலில் விழுந்து கிடந்த மருந்து விற்பனை பிரதிநிதி சிகிச்சைபலனின்றி இறந்தார்.புதுச்சேரி திருவள்ளுவர் நகர் செபஸ்தியார் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜய பிரவீன், 42; மருந்து விற்பனை பிரதிநிதியான இவர் மதுபழக்கத்திற்கு ஆளாகி வேலைக்கு செல்லவில்லை. இவருடைய மனைவி கமலா, 45; திருக்கனுார் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.குடிபழக்கத்தில் இருந்து மீள கடந்த மூன்று மாதமாக பெங்களூருவில் உறவினர் வீட்டில் தங்கி விஜய பிரவீன் சிகிச்சை பெற்று வந்தார்.மனைவி வீட்டில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மைத்துனர் பண்ணாரி ராஜாவுடன் புதுச்சேரிக்கு 31 ம் தேதி வந்தார். வீட்டிற்கு செல்லாமல் தனியார் விடுதியில் தங்கினார். இந்நிலையில் கடந்த 2 ம் தேதி காலை 11 மணியளவில் ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ள வாய்க்காலில் விஜய் பிரவீன் விழுந்து கிடந்தார். தகவலறிந்த பெரியக்கடை போலீசார் வந்து அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் இறந்தார். இது குறித்து பெரியக் கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE