புதுச்சேரி: ஸ்பெஷல் பிராஞ்ச் எஸ்.பி., மோகன்குமார் இனி, போலீஸ் தலைமையக பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட் டுள்ளது.புதுச்சேரி போலீஸ் தலைமையகத்தின் எஸ்.பி.,யாக இருப்பவர் நல்லாம் கிருஷ்ணராய பாபு. இவர் அப்பணியில் இருந்து தற்போது திடீரென விடுவிக்கப்பட்டுள் ளார். அவருக்கு பதிலாக, ஸ்பெஷல் பிராஞ்ச் எஸ்.பி., மோகன்குமார், போலீஸ் தலைமையக பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை போலீஸ் சிறப்பு பணி அதிகாரி ரகுநாதன் பிறப்பித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE