ராயலா நகர் : பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை, ராமாபுரம், காமராஜர் சாலையில் உள்ள மருந்தகம் அருகே, சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக, ராயலா நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட, மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த வினோத், 38, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த குமார், 58, உள்ளிட்ட, எட்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 85 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE