வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு பகுதியில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று வெங்கிட்டாபட்டி தெருவைச் சேர்ந்த மருதையம்மாள் வீடு மழையால் இடிந்து விழுந்தது. நள்ளிரவில் மருதையம்மாள் அவரது மகன் பெரியசாமி ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டின் மேற்கூரையில் இருந்து மண் விழத் தொடங்கியது. சுதாகரித்த பெரியசாமி தாயை அழைத்துக் கொண்டு வெளியேறியதால் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வத்தலக்குண்டு வருவாய்த் துறையினர் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE