திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட இறுதிப்போட்டி இன்று நடக்கிறது.பொங்கலை முன்னிட்டு திண்டுக்கல் கிராமப்புற நண்பர்கள் குழு சார்பில் ஐவர் கால்பந்து போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் மதுரை, திண்டுக்கல் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 56 அணிகள் விளையாடி வருகின்றனர். 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகள் நாக் -அவுட் முறையில் நடக்கிறது. கோட்டைமாரியம்மன் கோயில் பின்புறம் எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் நடைபெறும் ஐவர் கால்பந்தாட்டத்தின் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE