திருத்தணி : ஒன்றிய குழு கூட்டத்தில், 12 கவுன்சிலர்களில், நான்கு பேர் மட்டுமே பங்கேற்றதால், பெயரளவுக்கு கூட்டம் நடந்தது. தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றவில்லை.
திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய கவுன்சிலர்கள் குழு சாதாரண கூட்டம் நடந்தது. ஒன்றிய குழு தலைவர் தங்கதனம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு வரவேற்றார்.கூட்டத்தில், மொத்தம் உள்ள, 12 ஒன்றிய கவுன்சிலர்களில், தலைவர் உட்பட நான்கு கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றதில், பெயரளவுக்கு கூட்டம் நடந்தது.கூட்டத்தில் வரவு - செலவு கணக்குகள் உட்பட மொத்தம், 15 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. ஆனால், கூட்டத்தில் போதிய உறுப்பினர்கள் இல்லாததால், தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
இது குறித்து, திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு கூறுகையில், 'மூன்றில் ஒரு பங்கு கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றால், வெறும் கூட்டம் மட்டும் நடத்தலாம். 'பாதிக்கு மேல் கவுன்சிலர்கள் பங்கேற்றால் தான் தீர்மானங்கள் நிறைவேற்ற முடியும். 'ஆகையால், தீர்மானங்கள் நிறைவேற்றப்படாத சாதாரண கூட்டம் நடந்தது' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE