பீஜிங்: நம் அண்டை நாடான சீனாவின் வூஹான் நகரில் தான், கொரோனா வைரஸ் முதலில் உருவானது. இதனால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள், சீனாவை கடுமையாக விமர்சித்து வந்தன. இதுகுறித்து விசாரணை நடத்தக்கோரியும், சர்வதேச அமைப்புகளிடம் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு, இதுகுறித்து விசாரிக்க முடிவு செய்துள்ளது. அந்த அமைப்பின் நிபுணர்கள் குழு, விரைவில் சீனாவின் வூஹானுக்கு வந்து, ஆய்வு நடத்த உள்ளது. ஆய்வு செய்யும் தேதி, இடம் குறித்த இதர தகவல்கள் வெளியிடப்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE