புதுடில்லி : நாட்டில், 1.04 கோடி பேருக்கும் மேற்பட்டோர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், 96.44 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா பாதிப்பை கண்டறிய, கடந்த, 24 மணி நேரத்தில், 9.16 லட்சம் பேரிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.இதன் வாயிலாக, 18 ஆயிரத்து, 222 பேரிடம் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன், வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, நான்கு லட்சத்து, 31 ஆயிரத்து, 639 ஆக உயர்ந்து உள்ளது.வைரஸ் பாதிப்பில் இருந்து, ஒரு கோடியே, 56 ஆயிரத்து, 651 பேர் குணமடைந்துள்ளனர்; மீட்பு விகிதம், 96.44 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வைரஸ் பாதிப்பால் கடந்த, 24 மணி நேரத்தில், 228 பேர் பலியாயினர். இதில் மஹாராஷ்டிராவில், 73, மேற்கு வங்கத்தில், 21, உத்தர பிரதேசத்தில், 17 இறப்புகள் பதிவாகி உள்ளன.இவர்களுடன், இதுவரையிலான பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 50 ஆயிரத்து, 798 ஆக உயர்ந்துள்ளது; இறப்பு விகிதம், 1.45 சதவீதமாக உள்ளது.உயிரிழப்பில், 49 ஆயிரத்து, 970 பேருடன், மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக தமிழகத்தில், 12 ஆயிரத்து, 208 பேரும், கர்நாடகாவில், 12 ஆயிரத்து, 134 பேரும் இறந்துள்ளனர்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
90 பேருக்கு உருமாறிய கொரோனா ஐரோப்பிய நாடான பிரிட்டனில், உருமாற்றம் அடைந்த, வீரியம் மிக்க புதிய வகை கொரோனா பரவல் வேகம் அடைந்துள்ளது. அங்கிருந்து நம் நாட்டிற்கு திரும்பியோர், அவர்களின் குடும்பத்தினர் என, பரிசோதனைகள் தொடர்கின்றன. இதில், 90 பேரிடம் புதிய வகை பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரும் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE