வெள்ளகோவில்: நின்ற லாரி மீது கார் மோதியதில், தம்பதி உட்பட மூன்று பேர் பலியாகினர்.
கோவை மாவட்டம் வெள்ளலுார், அண்ணா நகரைச் சேர்ந்தவர் மயில்சாமி, 39; கத்தாரில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். விடுமுறையில், கோவை வந்தார். மனைவி இந்து, 37, மாமியார் கவுசல்யா, 60 உட்பட ஆறு பேர், 'மாருதி செலிரியோ' காரில், திருநள்ளாறு புறப்பட்டனர். மயில்சாமி, காரை ஓட்டினார்.திருப்பூர் மாவட்டம், ஓலப்பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், நேற்று அதிகாலை 4:30 மணியளவில் கார் வந்தபோது, பழுதாகி நின்ற லாரி மீது மோதியது.
இதில் மயில்சாமி, இந்து, கவுசல்யா ஆகியோர், அதே இடத்தில் இறந்தனர்.மகன் குரு கவுதமன், 13 மற்றும் உறவினர்கள் கலைவாணி, 38, ரம்யா, 11 படுகாயம் அடைந்தனர். இவர்கள், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.லாரி டிரைவர் திருச்சி மாத்துாரைச் சேர்ந்த பாபு, 50, என்பவரிடம், வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE