சென்னை:விவசாய மின் இணைப்பு உள்ளிட்ட பணிகளில் பயன்படுத்த, மின் வாரியம், 3,000 டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் செய்ய உள்ளது.
தமிழக மின் வாரியம்,துணை மின் நிலையங்களுக்கு வரும் மின்சாரத்தை, மின் கம்பம், 'கேபிள்' ஆகிய மின் வழித் தடங்களில் அனுப்பி, 'டிரான்ஸ்பார்மர்' மற்றும் மின் வினியோக பெட்டி உதவியுடன் வினியோகம் செய்கிறது. வரும் மார்ச் மாதத்திற்குள், விவசாயத்திற்கு, சாதாரணம், விரைவு திட்டத்தின் கீழ், 60 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. அதற்கான பணி, முழுவீச்சில்மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மத்திய அரசின், 'உதய்' திட்டத்தின் கீழ், பல்வேறு பகுதிகளில், புதிய மின் வழித் தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பயன்படுத்துவதற்காக, மின் வாரியம், தற்போது, 63, 'கிலோ வோல்ட் ஆம்பியர்' திறனில், 3,000 டிரான்ஸ்பார்மர்களை வாங்க உள்ளது.மேலும், 15 ஆயிரம் கி.மீ., துாரத்திற்கு மின் கம்பியும்; 40 ஆயிரம் மின் கம்பங்களும் கொள்முதல் செய்யப்பட உள்ளன. அவற்றை தரமாக வாங்குவதில், அதிக கவனம் செலுத்துமாறு, வாரிய பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE