சென்னை:ரேஷன் கடைகளில், மாதாந்திர அத்தியாவசிய பொருட்கள், வரும், 18ம் தேதி முதல், வினியோகம் செய்யப்பட உள்ளன.
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை, குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. அவை, மாதம்தோறும் வினியோகம் செய்யப்படுகின்றன.
இம்மாதம், 4ம் தேதி முதல், ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதனால், தற்போது அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படவில்லை.பொங்கல் பரிசு, இம்மாதம், 13ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.
அதற்கு பின், பொங்கல் விடுமுறை. இதனால், கார்டுதாரர்கள், தங்களின் மாதாந்திர அத்தியாவசிய பொருட்களை, 18ம் தேதி முதல், ரேஷன் கடைகளில் வாங்கலாம். இருப்பினும், 13ம் தேதிக்கு முன், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்த கடைகளில், கார்டுதாரர்கள், அத்தியாவசிய பொருட்களை பெறலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE