குன்னுார்:குன்னுார் அருகே, ஜார்கண்ட் தொழிலாளர் குடும்பத்தினர் நான்கு பேர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக, பா.ஜ., பழங்குடி குழுவினர் நேரடி விசாரணை நடத்தினர்.நீலகிரி மாவட்டம், குன்னுார் கொலக்கம்பை அருகே, தனியார் எஸ்டேட் குடியிருப்பில், கடந்த, 6ம் தேதி, ஜார்கண்ட் தொழிலாளி அசோக் பகத் துாக்கில் தொங்கிய நிலையிலும், மனைவி மற்றும் இரு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட நிலையிலும் காணப்பட்டனர். குன்னுார் டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையில், ஐந்து தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.இந்நிலையில், ஜார்கண்ட் பா.ஜ., எம்.பி.,யும், பழங்குடி தலைவருமான சமீர் ஓரான் அறிவுரையின்படி, பா.ஜ., மாநில எஸ்.டி., பிரிவு பார்வையாளர் ராமசாமி, கோவை மாநகர பா.ஜ., எஸ்.டி. பிரிவு தலைவர் ரஞ்சித்குமார் உள்ளிட்ட குழுவினர், நேற்று கொலக்கம்பை வந்தனர். போலீசார் துணையுடன், ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்களிடம் விபரங்களை கேட்டறிந்தனர்.குழுவினர் கூறுகையில்,'பழங்குடியினத்தை சேர்ந்த, ஒரே குடும்பத்தில் 4 பேர் இறந்துள்ளனர். இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு வலியுறுத்தப்படும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE