கம்பம் : கம்பம் பகுதியில் நெல் அறுவடை முடியும் தருவாயில் உள்ளது. இதில் வைக்கோல் போதிய அளவிற்கு கிடைத்துள்ளதால் தீவன தட்டுப்பாடு நீங்கியது.
இதனால் கால்நடை வளர்ப்போர் நிம்மதியடைந்துள்ளனர்.கம்பம் சுற்றுப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. கடந்த சில வாரங்களாக அறுவடை நடந்து வருகிறது. தற்போது அறுவடை முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது. இதனால் வைக்கோல் வரத்து திருப்தியாக உள்ளது. ஒரு குழி (60 சென்ட்) ரூ.2000க்கு விற்கப்படுகிறது. இதன் காரணமாக கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு நீங்கியுள்ளது. மேலும் சீலையம்பட்டி, கோவிந்தன்பட்டி, அனுமந்தன்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் தோட்டங்களில் பச்சைப் புல் தீவனத்திற்காக வளர்க்கப்படுகிறது.
எனவே தீவன தட்டுப்பாடு ஏற்படாது என கால்நடை வளர்ப்போர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் கேரளாவை சேர்ந்தவர்கள் கூடுதல் விலை கொடுத்து வைக்கோல் கொள்முதல் செய்து வருவதாகவும், அதனால் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE