ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி நகர் நல கமிட்டி ஆலோசனைக்கூட்டம் தற்காலிக தலைவர் ராமசாமி தலைமையில் நடந்தது.
தற்காலிக கவுரவத் தலைவர் தண்டாயுதபாணி, தற்காலிக பொருளாளர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தனர். தற்காலிக செயலாளர் சரவணன் வரவேற்றார். நகர் நல கமிட்டியின் கோரிக்கையை ஏற்று ஆண்டிபட்டி மின் மயானத்திற்கு ரூ. 1.17 கோடி, தெப்பம்பட்டி ரோட்டில் முத்தமிழ் பூங்கா சீரமைப்பிற்கு ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்தமைக்கு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஜன. 16-ல்முத்தமிழ் பூங்காவில் ஆண்டிபட்டி பேரூராட்சி சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் நகர நல கமிட்டியினர் கலந்து கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.முத்து முருகேசன் நன்றி கூறினார்.-----
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE