போத்தனூர்:கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், நம்ம ஊரு பொங்கல் விழா நடந்தது.சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோட்டில், குரும்பபாளையம் பிரிவு, பிருந்தாவன் பள்ளி அருகே நடந்த விழாவிற்கு, கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமை வகித்தார். பொங்கல் வைத்தல், கோலமிடுதல், உரி அடித்தல், சிலம்பம் சுற்றுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன.வெற்றி பெற்றவர்களுக்கு மாநில பா.ஜ. துணை தலைவர் அண்ணாமலை பரிசு வழங்கினார். பங்கேற்றவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.பிருந்தாவன் பள்ளி அறங்காவலர் திருமூர்த்தி, முதல்வர் வனிதா, கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் அமுதா, பொது செயலாளர்கள் குமரேஷ்,கிருஷ்ணசாமி, அமித்ஷா பேன்ஸ் கிளப் மாநில தலைவர் முரளி உள்பட பலர் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடைந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE