கோவை:வீட்டு வளாகத்தில் வளர்க்கப்பட்ட சந்தன மரத்தை, வெட்டிக் கடத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை சிங்காநல்லுார் திருநகரை சேர்ந்தவர் செந்தில்குமார், 47. இவரது வீட்டில் சந்தனமரத்தை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த செந்தில்குமார் மரம் முறிந்து விழும் சத்தம் கேட்டு, வீட்டின் வெளியே வந்து பார்த்தார்.அப்போது இரு மர்மநபர்கள், சந்தன மரத்தை வெட்டிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சத்தம் கேட்டு, மரத்தின் ஐந்தடி உயரமுள்ள வெட்டிய பகுதியை எடுத்துக் கொண்டு இருவரும் தப்பினர். சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE