கோவை:போலீஸ் அதிகாரிகள் வாகனங்களில் இருந்து, 'புல்பார்' கள் அகற்றப்பட்டன.கார், மினி சரக்கு வாகனங்களில் கூடுதல் பாதுகாப்புக்காக, 'புல் பார்'கள் பொருத்தப்படுகின்றன. இதனால், வாகனங்களில் உள்ள சென்சார் வேலை செய்யாததால் விபத்து காலங்களில், ஏர் பலுான் விரியாது. விபத்துக்களில் பாதிப்பு ஏற்படும். இதுபோன்று பிரச்னைகளை தவிர்க்க, மோட்டார் வாகன சட்டத்தின் படி, 'புல் பார்' அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. வாகனங்களில் பொருத்தப்படும் இந்த புல்பார்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.அரசு அதிகாரிகளின் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள, புல்பார்கள் அகற்றப்படாதது குறித்து சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, அரசு வாகனங்களில் உள்ள புல் பார்கள் எனப்படும் பம்பர்களை அகற்ற தலைமை செயலர் உத்தரவிட்டார்.நேற்று, கோவை மாநகர போலீஸ் அதிகாரிகளின், வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த, புல் பார்கள் அகற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE