புதுடில்லி: கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டினை தாமதமின்றி அனுப்பிவைத்து உதவுங்கள் என பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனாரோ கடிதம் எழுதியுள்ளார்.
உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் உள்ளது. இதனால் அந்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி உடனடியாக அதிக அளவில் தேவைப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் கொரோனா தடுப்பூசியின் தேவை குறித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டது. அதில் அதிபர் ஜெயிர் போல்சனாரோ, ‛பிரேசிலின் தேசிய தடுப்பூசி திட்டத்தினை துவக்க 20 லட்சம் தடுப்பூசி மருந்துகளை தாமதமின்றி அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE