அந்தியூர்: தாசில்தார் பேச்சுவார்த்தையில், சமத்துவபுரம் பகுதிவாசிகள், சமாதானம் அடைந்தனர். அந்தியூர் அருகே சமத்துவபுரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். சமத்துவபுரத்தை ஒட்டி, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில், வீட்டுமனை விற்பனை நடக்கிறது. சாலை இல்லாததால், வீட்டு மனை அமைந்துள்ள இடத்துக்கு செல்பவர்கள், சமத்துவபுரம் சாலையை பயன்படுத்தி வந்தனர். சமத்துவபுரம் பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, ரியல் எஸ்டேட் தரப்பினர், மிரட்டியுள்ளனர். இதுகுறித்து அந்தியூர் தாசில்தார், நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ரேஷன் கார்டுகளை ஒப்படைப்பதாக, தெரிவித்தனர். இந்நிலையில் இரண்டாம் கட்டமாக, தாசில்தார் நேற்றும் பேச்சுவார்த்தை நடத்தினார். ''கோரிக்கையை மனுவாக தந்தால், உயரதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் பகுதிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்,'' என்று, தாசில்தார் உறுதி கூறவே சமாதானமடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE