ஈரோடு: ஈரோட்டில், ஓடும் பஸ்சில், மொபைல்போன் திருடி தப்பிய இருவரை, மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். ஈரோடு, சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகீம், 48, கூலி தொழிலாளி. நண்பர் உசேனுடன், ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து பன்னீர் செல்வம் பார்க்குக்கு, நேற்று காலை டவுன் பஸ்சில் சென்றார். சவிதா கார்னர் அருகே பஸ் மெதுவாக சென்றபோது, அப்துல் ரகீம் அருகில் நின்ற இருவர், அவர் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல்போனை திருடிக்கொண்டு, இறங்கி ஓடினர். அப்துல் ரகீம் கூச்சலிட்டவாறே விரட்டினார். அப்பகுதி மக்கள் ஆசாமிகளை மடக்கி பிடித்து, ஈரோடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், சேலம், கொண்டலாம்பட்டி, காத்தாயம்மாள் நகரை சேர்ந்த தனிஷ், 26; ஈரோடு, கருங்கல்பாளையம், கமலா நகரை சேர்ந்த சக்திவேல், 32, என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE