ஆத்தூர்: கூலமேட்டில், வரும், 17ல், ஜல்லிக்கட்டு விழா நடத்த, பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, ஆர்.டி.ஓ., - டி.எஸ்.பி., ஆய்வு செய்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆத்தூர் அருகே, கூலமேட்டில், வரும், 17ல், ஜல்லிக்கட்டு நடத்த, விழா குழுவினர் மனு கொடுத்து, ஏற்பாடு செய்து வருகின்றனர். இதனால், ஆத்தூர் ஆர்.டி.ஓ., துரை, டி.எஸ்.பி., இம்மானுவேல்ஞானசேகர், கால்நடை, ஊரக வளர்ச்சி, வருவாய், பொதுப்பணித்துறை அலுவலர்கள், நேற்று, ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதியை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, மைதானம், வாடிவாசல், பாதுகாப்பு தடுப்பு கட்டை அமைத்தல், காளைகளை பரிசோதிக்க மருத்துவ முகாம், மாடுபிடி வீரர்கள் காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம் ஏற்பாடு குறித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.
இதுகுறித்து, வருவாய்த்துறையினர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு விழாவில், காளைகளை பரிசோதிக்கும் இடம், அவற்றுக்கு குடிநீர், தீவனம் மற்றும் நிழலில் நிற்கவைக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க, சமூக இடைவெளி பின்பற்றுதல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுப்பணி அதிகாரிகள், இரண்டாம் கட்ட ஆய்வு செய்து அறிக்கை வழங்கியதும், கலெக்டர் - எஸ்.பி., ஆய்வு செய்வர். பின், ஜல்லிக்கட்டு நடத்தும் விபரம் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE