இடைப்பாடி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இடைப்பாடி கிரிக்கெட் கிளப் சார்பில், மாநில அளவில், 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, நேற்று முன்தினம் தொடங்கியது. இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கும் இப்போட்டியில், சென்னை, கோவை, சேலம், ஈரோடு, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து, 32 அணிகள் பங்கேற்றுள்ளன. வரும், 17 வரை, போட்டிகள் நடக்கின்றன. முதல் நாளில் நடந்த போட்டியில், எம்.எல்.சி.சி., சென்னை அணியும், நேற்றைய போட்டியில், ஏ.பி.ஜே., சென்னை கிரிக்கெட் கிளப் அணியும் வெற்றி பெற்றன. இதில், முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே, ஒரு லட்சம் ரூபாய், 50 ஆயிரம், 15 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும். சிறந்த மட்டையாளர், பந்துவீச்சாளர்களுக்கு சிறப்பு பரிசுகளும் உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE