சேலம்: சேலம் மண்டலத்தில், கொரோனா தடுப்பூசியை பாதுகாக்க, பராமரிக்க, 75 குளிர்பதன பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. அவை, சுகாதார மாவட்டங்கள் முறையே, சேலம், நாமக்கல்லுக்கு, தலா, 24, ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரிக்கு, தலா, 9 வீதம், தனித்தனியே அனுப்பப்பட்டு, கிடங்கில் தயாராக உள்ளன. இதையடுத்து, தடுப்பூசி போடும் ஒத்திகை நடத்தி, சுகாதாரப்பணியாளர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அவர்களும் தயாராக உள்ளனர். அதேநேரம், முதல் கட்டமாக, தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அரசு, தனியார் மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் பெயர் பட்டியல் சேகரிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதற்கு, வரும், 16 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, 0.5 எம்.எல்., அளவுள்ள, 93 ஆயிரம் சிரிஞ்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுப்பப்பட்டுள்ளன. அதில், ஆத்தூருக்கு, 43 ஆயிரம், சேலத்துக்கு, 50 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE