சேலம்: சேலம், ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன், முதலாவது நடைமேடையில், நேற்று, கேட்பாரற்ற நிலையில், 16 மூட்டைகள் இருந்தன. இதனால், ரோந்து பணியில் ஈடுபட்ட, ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார், சோதனை செய்ததில், அது, ரேஷன் அரிசி, தலா, 25 கிலோ வீதம், 400 கிலோ இருப்பது தெரியவந்தது. கடத்த முயன்ற கும்பல், போலீஸ் கண்காணிப்புக்கு பயந்து விட்டுச்சென்றிருக்கலாம் என, போலீசார் கூறினர். அத்துடன், அரிசியை பறிமுதல் செய்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE