ஓசூர்: குருபரப்பள்ளி, பேரிகையில், குட்கா விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளி ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., வெங்கடாசலம் தலைமையிலான போலீசார், பந்தாரப்பள்ளியில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியிலுள்ள மளிகை கடையில், தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்த, சென்றாயகவுண்டனூரை சேர்ந்த வெங்கட்டப்பன், 45, என்பவர் கைது செய்யப்பட்டார். அதேபோல், பேரிகை போலீஸ் எஸ்.ஐ., பாஞ்சாலி தலைமையிலான போலீசார், பேரிகை கோவில் தெருவில் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா விற்ற, கிரண்குமார், 35, என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும், குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE