கிருஷ்ணகிரி: பர்கூர் ஒன்றிய அலுவலகத்தில், அரசு பள்ளி சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்ற இயற்கை உணவு திருவிழா நடந்தது. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) செல்வம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், ஒன்றியக்குழு தலைவர் கவிதா கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர். விழாவில், சமையல் பயன்பாடின்றி செய்யப்பட்ட உணவு வகைகள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள், கம்பு ரொட்டி, கேழ்வரகு ரொட்டி, கம்மங்கூழ் உள்ளிட்டவை செய்யப்பட்டன. மேலும், நெருப்பில் வேக வைக்காத காய்கறிகள், கீரை வகைகள் காட்சி படுத்தப்பட்டிருந்தன. வட்டார கல்வி அலுவலர்கள் பழனிசாமி, பால்ராஜ், வட்டார குழந்தைகள் நல அலுவலர் வனிதா, வட்டார வளர்ச்சி துணை அலுவலர் சாந்தகுமாரி ஆகியோர், சிறந்த உணவு வகைகளை தேர்வு செய்தனர். மேலும், இயற்கையான உணவுகளில் கிடைக்கும் சத்து குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பின்னர், உணவு திருவிழாவில் பங்கேற்றவர்களுக்கு, இயற்கை உணவு வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE