ஓசூர்: கிருஷ்ணகிரியில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கான, நீர் பாதுகாப்பு மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி, வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில், திருச்சி மாவட்டம், துவாக்குடி பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின், பாசன மேலாண்மை பயிற்சி நிலையம் மற்றும் மத்திய நீர்வள ஆதாரத்துறையின் ஜல்சக்தியின், புனே தேசிய நீர் கழகம் ஆகியவை சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளுக்கான நீர் பாதுகாப்பு மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணன் தலைமை வகித்தார். பாசன மேலாண்மை பயிற்சி நிலைய இணை இயக்குனர் இளங்கோவன் பயிற்சி கையேட்டை வெளியிட்டார். தொடர்ந்து, இந்திய, தமிழக நீர்வளம், கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வள ஆதாரங்கள், நீர்வள மேலாண்மை உத்திகள், நீர் மேலாண்மைக்கான மானிய வாய்ப்புகள் மற்றும் விவசாயிகளின் வெற்றிக்கதைகள் ஆகிய தலைப்புகளில், விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஓய்வு பெற்ற வேளாண் உதவி இயக்குனர் புகழேந்தி, ஓசூர் வேளாண் உதவி இயக்குனர் மனோகரன், சென்னை பொதுப்பணித்துறை பொறியாளர் பார்த்திபன் ஆகியோர், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதில் பங்கேற்ற விவசாயிகளுக்கு, சான்றிதழ், பயிற்சி கையேடு மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE