புதுடில்லி :'நாசா' சார்பில் சந்திரனின் தென் துருவத்தைக் கண்டறியும் பணிகளுக்கான திட்டமிடல் மற்றும் ஆய்வுகள் தொடர்பான செயலியை உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் உருவாக்கும் போட்டி நடந்தது.விண்வெளி ஆய்வின் தொழில்நுட்ப பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலான இப்போட்டியில் ஹரியானாவின் குருகிராமில் உள்ள தனியார் பள்ளி மாணவர் ஆர்யன் ஜெயின் பங்கேற்றார்.அமெரிக்காவின் ஆறு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து போட்டியில் பங்கேற்ற ஆர்யன் ஜெயின் வெற்றி பெற்றுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE