சென்னை : பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் 2500 ரூபாய் ரொக்கம் பட்டுவாடாவில் முழு கவனத்துடன் செயல்படுமாறு ரேஷன் கடை ஊழியர்களை கூட்டுறவு சங்கங்கள் அறிவுறுத்தி உள்ளன.
தமிழக அரசு ரேஷன் கடைகள் வாயிலாக 2.10 கோடி அரிசி கார்டுதாரருக்கு தலா 2500 ரொக்கத்துடன் பொங்கல் பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது.ஒவ்வொரு கடையிலும் உள்ள கார்டுதாரரின் எண்ணிக்கைக்கு உரிய தொகையை ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்கள் ஊழியர்களிடம் வழங்கியுள்ளன. தினமும் ஒவ்வொரு கடையிலும் குறைந்தது 200 கார்டுதாரருக்கு மிகாமல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் ரேஷன் ஊழியர்கள் 2500 ரூபாய்க்கு பதில் கூடுதலாக வழங்குவது பணத்தை தொலைத்து விடுவது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.இதையடுத்து பொங்கல் பரிசில் ரொக்க தொகை பட்டுவாடாவில் முழு கவனத்துடன் செயல்படும் வகையில் பணத்தை சரியாக எண்ணி கொடுக்குமாறும் பணத்தை பாதுகாப்பாக வைக்குமாறும் ஊழியர்களை கூட்டுறவு சங்கங்கள் அறிவுறுத்தியுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE