ப.வேலூர்: ப.வேலூர், பாலப்பட்டி, மோகனூர், வளையப்பட்டி, பரமத்தி, நல்லூர், கந்தம்பாளையம், மணியனூர், வேலகவுண்டம்பட்டி, சோழசிராமணி, ஜேடர்பாளையம், ஆனங்கூர், பிலிக்கல்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மதியம், 1:00 மணியளவில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு மேல் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. நேற்று காலை, 10:00 மணியளவில் தொடர் சாரல் மழை பெய்தது. இதனால் கூலித்தொழிலாளர்கள், சாலையோர தள்ளுவண்டி மற்றும் காய்கறிகடைகள், பல்வேறு வகையான வணிக நிறுவன உரிமையாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. விவசாய பயிர்களில் மழைநீர் தேங்கி அழுகும் நிலை ஏற்பட்டது. ப.வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல், நேற்று காலை நிலவரப்படி, மழையளவு 22 மி.மீ., ஆக பதிவானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE