பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஒன்றியம், களியனூரில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் கிராம தொழில் வளர்ச்சி கூட்டம் நடந்தது. பஞ்., தலைவர் ரவி குழந்தைவேல் தலைமை வகித்தார். துணை தலைவர் வெங்கடேசன், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட செயல் வட்டார அலுவலர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, ரவி குழந்தைவேல் கூறியதாவது: கிராம தொழில் வளர்ச்சி திட்டம் மூலம் சொந்தமாக தொழில் துவங்க மானிய முறையில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கான ஒப்புதல் மற்றும் ஆலோசனை கூட்டத்தில் மகளிர், ஆண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விவசாயம், விசைத்தறி, மளிகை கடை போன்ற தொழில்களை துவங்க பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களின் கருத்து அறிக்கையாக தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கொடுத்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE