குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, வெல்லம் லோடுடன் வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்தவர் கிருஷ்ணன், 38; லாரி ஓட்டுனர். இவர் ஓமலூரிலிருந்து வெல்லம் லோடு லாரியில் ஏற்றிக்கொண்டு, நேற்று, ஈரோடு மாவட்டம் சித்தோடு சென்று கொண்டிருந்தார். மாலை, 4:00 மணியளவில், குமாரபாளையம் கோட்டைமேடு புறவழிச்சாலை மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கும் போது, லாரியின் முன்பக்க டயர் வெடித்ததில், லாரி நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. கிருஷ்ணன் எந்த காயமும் இல்லாமல் தப்பினார். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE